Google

Wednesday, 26 March 2008

மழலை - மௌனம்

தாய் மட்டுமே அறிவாள்
குழந்தையின் மழலையை..
நான் மட்டுமே அறிவேன்
அவளின் மௌனத்தை..
ஏனெனில் நானும் ஒரு
தாய்தான் அவளுக்கு..

Tuesday, 25 March 2008

தற்கொலை

எனது இதயம் துடிப்பதை கூட
நிறுத்திவிட்டேன்...
அங்கு குடி இருக்கும் உன்னை
வெளியேற்ற மனமின்றி...

Sunday, 23 March 2008

நம்பிக்கை

இலையுதிர் காலங்களில்,
பசுமையான இலைகளை
இழந்ததற்க்காக வருந்துவதுமில்லை !
வீழ்ந்து கிடப்பதுமில்லை ! மரங்கள்...
வசந்தம் நமக்கும் வரும் என்று
காத்திருக்கின்றன நம்பிக்கையுடன் !
தோழா(ழி) ! துவண்டுவிடாதே !
துன்பங்களை கண்டு !
நிமிர்ந்து நில் மரம் போல் !
உனது காலம் வரும் ஒரு நாள் !
அதுவரை காத்திரு நம்பிக்கையுடன்..

Thursday, 13 March 2008

தவறுகள் சில..

உன்னை பார்த்த பொழுது தோன்றியது
- காதலிக்க வேண்டுமென்று !
உன்னை காதலித்த பொழுது தோன்றியது
- மணமுடிக்க வேண்டுமென்று !
உன்னை மணந்தபின்…தோன்றுகிறது…
- உன்னை ஏன் பார்த்தோமென்று !

Monday, 10 March 2008

மழை - ஹைக்கூ

கண் விழித்துப் பார்த்தேன்...
காணவில்லை அவளை...
நேற்று இரவு பெய்த மழை..